எழுதியது:பிரியாக்கண்ணு
ஆப்பிள் மரத்தின் ஒரு கிளை, தரையைத் தொடும் அளவுக்கு சாய்ந்து தொங்கியது. அந்த கிளை முழுக்க செக்கச் சிவந்த பழச்சாறு ததும்பும் ஆப்பிள் பழங்கள். “இந்தா, என்னை கடித்துப்பார், உன் வாயில் எவ்வளவு ஜூஸ் நிறையும் தெரியுமா?” என்று அழைப்பு விடுவது போல அவள் வாயருகே வந்து அசைந்தது ஒரு பெரிய கனி. அவள் கை அதைப் பறிக்க நீண்டது.
பக்கத்தில் வேறொரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆதாம், “வேண்டாம் ஏவாள், அந்த மரத்தின் பழத்தைப் பறிக்காதே” என்று அவசரமாகக் குரல் கொடுத்தான்.
“ஏன்? இது எவ்வளவு அழகாக இருக்கிறது பார்.”
“ஏனென்றால் அதை பறிக்கக் கூடாது என்பது கடவுளின் கட்டளை.”
“பார் ஆதாம், மற்ற மரங்களின் பழங்கள் இவ்வளவு நிறையவும் இவ்வளவு பெரிதாகவும், இவ்வளவு சாறு நிறைந்ததாகவும் இல்லையே. அதோடு,….”
“அதோடு?”
Read more »